‘வெயிட்… வெயிட்…’ கதவை உடைத்து விமானத்தை துரத்தி சென்ற பயணியால் பரபரப்பு..!


அயர்லாந்தில் டூப்ளின் நகரில் இருந்து ஆம்ஸ்டர் டாமுக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது வாலிபர் ஒருவர் பரபரப்பாக விமான நிலையத்துக்குள் நுழைந்தார்.

அதற்குள் விமானம் புறப்பட்டு விட்டது. இருந்தாலும் அந்த வாலிபர் கையில் சூட்கேசுடன் ‘வெயிட்… வெயிட்…’ என சத்தமிட்டபடி விமானத்தை விரட்டிக் கொண்டு ஓடி வந்தார்.

ஆனால் விமானம்அருகே செல்லவிடாமல் அவரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். உடனே அவர் விமான நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மேலும் ஒரு பெண்ணும் கலந்து கொண்டார்.

உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் பேட்ரிக் கெகோயே (23). என தெரியவந்தது.

தாமதமாக வந்ததால் அவர் வருவதற்குள் விமானம் புறப்பட்டு விட்டது. இருந்தாலும் கதவை உடைத்துக் கொண்டு விமானத்தை நோக்கி அதை தரை இறக்க ஓடி வந்தார். எனவே அவர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!