மாணவியின் உறவினர் தாக்கிய அவமானத்தால் பள்ளி காவலாளி தற்கொலை..!!


திருவள்ளூரை அடுத்த தளக்கான் சேரியை சேர்ந்தவர் முனுசாமி (65). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் இந்த பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் ஒரு மாணவியை பள்ளி வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.

அந்த மாணவியின் அக்கிளில் கைவைத்து இறக்கி விட்டதாக மாணவியின் உறவினர் அவரிடம் தகராறு செய்தனர். அவரை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவமானமும், மனவேதனையும் அடைந்த முனுசாமி சில நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்திரம் அடைந்த அவருடையை உறவினர்கள் காவலாளி முனுசாமி உடலை பள்ளி முன்பு வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவலாளியை தாக்கியவர்களுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து திருவள்ளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். காவலாளியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.

அதன்பிறகு காவலாளி முனுசாமி உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!