உல்லாசத்துக்கு மறுத்த அழகி குத்திக் கொலை…. பின்ணனியில் திடுக் தகவல்..!


போடி அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் இன்று காலை ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்ப நாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கூடலூரைச் சேர்ந்த கண்ணன் மனைவி முருகேஸ்வரி (30) என தெரிய வந்தது.

கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். முருகேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்து வந்தார். மேலும் போடி மற்றும் சில்லமரத்துப்பட்டியில் தங்கி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

இவர் மீது போலீசில் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் முருகேஸ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.

முருகேஸ்வரியை சிலர் நேற்று இரவு உல்லாசத்துக்காக இங்கு அழைத்து வந்துள்ளனர். அவர் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் உல்லாசத்துக்கு மறுத்துள்ளார். இதனால் போதையில் இருந்த அந்த கும்பல் முருகேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மோப்பநாய் அவரது உடலை முகர்ந்து பார்த்து விட்டு 2 கி.மீ தூரம் ஓடி நின்றது.

இதனையடுத்து அவரது உடலை போடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!