சிகரெட் பிடித்து வட்ட வட்டமாக புகைவிடும் சிம்பன்ஸி குரங்குகள்…. வைரல் புகைப்படம்..!


வடகொரியாவில் மனிதர்களைப் போன்றே சிம்பன்ஸி குரங்கு சிகரெட் பிடிப்பதால் அதைப் பார்ப்பதற்காக மக்களின் கூட்டம் அந்த பூங்காவில் அலை மோதுகிறது.

வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் உள்ள சென்ட்ரல் விலங்கியல் பூங்காவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருவிக்கப்பட்ட உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் சுட்டித்தனமாக இருக்கும் சிம்பன்ஸி வகை குரங்கு ஒன்று அங்கு உள்ளது. இந்த குரங்கிற்கு ஆஸெலா என்று பெயரிடப்பட்டுள்ளது.

பூங்காவில் இருக்கும் ஆஸெலா மனிதர்களைப் போன்றே புகைப்பிடிக்கும் காட்சி இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிகரெட்டில் இருந்து மற்றொரு சிகரெட்டைப் பற்றவைத்து வாயிலிருந்து புகை விடுகிறது. ஆஸெலா புகைப்பிடிக்கும் அழகைப் பார்க்கவும், அதன் சேட்டைகளை ரசிக்கவும் அந்த விலங்கியல் பூங்காவிற்கு ஏராளமான மக்கள் செல்கின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!