நடிகை வரலட்சுமிக்காக விட்டுக்கொடுத்த கமல்…!


விஜய்யின் ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, `மாரி 2′ விமலின் கன்னி ராசி, ஜெய்யின் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன.

கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு சவாலான வேடங்களில் நடிக்கும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிகின்றன. வரலட்சுமி அடுத்து ஜே.கே. இயக்கத்தில் பார்வை திறனற்றவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் வரலட்சுமி தான் கதையின் நாயகி. இந்த படத்துக்கு முதலில் ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினார்கள்.

ஆனால் கமலின் அனுமதிக்காக காத்திருந்ததால் தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இந்த தலைப்புக்கு கமல் சம்மதமும் அனுமதியும் அளித்துவிட்டார். படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்க இருக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!