அமெரிக்காவையே கை கட்டி நிற்க வைத்த ஒரே ஒரு தமிழன்…!


காமராஜர் பதவியில் இருந்த நேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா படுதோல்வி. நேரு மிக வருத்தத்துடன் இருந்தார். அந்நேரம் காமராசரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து, காமராஜரிடம் புலம்பி தீர்த்து விட்டார்.

உடனே காமராஜர், இப்ப என்ன பிரச்சனை..? அதற்கு நேரு, நம்ம கிட்ட போதுமான நவீன ஆயுதங்கள் இல்லாததினால் தான் இந்த தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது என நேரு கூற.


அதற்கு காமராஜர், மத்த வேலையை நிறுத்திவிட்டு அந்த அமெரிக்ககாரன் கிட்ட நமக்குத் தேவையானதை வாங்குங்க.. வாங்கலாம் தான் ஆனால்….. என்று இழுத்தார் நேரு…. இன்னும் என்ன பிரச்சனை?

இல்ல, அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு அனுப்பனும் என்றால், அமெரிக்காவில ஏதாவது ஒரு பேங்க் நமக்கு பண உத்தரவாதம் எழுதி கொடுக்கணும். ஆனா, இந்தியாவை நம்பி எந்த பேங்க்கும் உத்திரவாதம் தர மாட்டேன்ங்கிறான்… என்று வருத்தத்துடன் சொன்னார் நேரு.


உடனே காமராஜர் அவருடைய பாஷையில், அவன் கடை இங்க ஏதாவது இருக்கா? நேருவுக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜர் மீண்டும் கேட்டார். அட அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்?

நேரு புரிந்துகொண்டு உடனே, இருக்கு…. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ன்னு ஒரு பேங்க் இங்க இருக்கு என கூற உடனே காமராஜர், அதை உடனே இழுத்து மூட சொல்லுங்க நேரு திகைத்தார்… அய்யோ அதை மூட சொன்னால் சர்வதேச பிரச்சனை ஆகுமே?


உடனே காமராஜர் அட என்னமோ ஆகட்டும். நமக்கு உதவாத அவன் கடை இங்க எதுக்குங்கறேன்? உடனே நேரு எதையும் யோசிக்காமல் அந்த வங்கிக்கு உடனடியாக ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தார்.

எங்களுக்கு உதவி செய்யாத உங்கள் நாட்டு எந்த தொழிலும் இனி எங்கள் நாட்டில்வேண்டியதில்லை… உடனே இடத்தை காலி செய்யவும் என்ற தகவல் வங்கி அதிகாரியை திகைக்க வைத்தது. உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பினர்.

அடுத்த சில மணி துளிகளில் அமெரிக்க வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா ஆயுதம் வாங்குவதற்கு உத்தரவாதம் தர தயார் ஆயினர். கர்மவீரர் காமராஜரின் விவேகத்தையும், வீரத்தையும் பார்த்து நேரு வியப்பில் ஆழ்ந்து விட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!