உங்கள் முகத்தை ஆப்பிள் சைடர் வினிகர் மூலம் பளபளப்பாக்கலாம்… எப்படி தெரியுமா..?


சருமத்தை அழகாக வைத்திருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எனினும், சரும பாதுகாப்பிற்காக இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களை வைத்தே சருமத்தை அழகாகப் பேண முடியும்.

ஆம், ஆப்பிள் சைடர் வினிகரினால் சருமத்தை அழகாக மாற்ற முடியும். அது எப்படி எனக் கேட்கின்றீர்களா?

தேவையான பொருட்கள்
01. 1 மேசைக் கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்
02. 3 மேசைக் கரண்டி தண்ணீர்

செய்முறை
ஒரு சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் மேற்கூறிய பொருட்களை கலந்து கொள்ளவும். பின்னர் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி பின்னர் பஞ்சு ஒன்றின் மூலம் மேற்குறித்த கலவையை தொட்டு முகத்தில் பூசவும்.

இவ்வாறு செய்து வருவதன் மூலம்,
1. முகத்தில் உள்ள சிறு துளைகளில் உள்ள அழுக்குகள் அகற்றப்படும்
2. முகப் பருக்கள் வருவது தடுக்கப்படும்
3. சருமத்தின் பி.எச் பெறுமானம் சமநிலை படுத்தப்படும்
4. வயது முதிர்வது பிற்போடப்படும்
5. இறந்த செல்கள் அனைத்தும் அகற்றப்படும்
6. சருமத்தில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை குணமாக்கும்
பிறகென்ன? ஆப்பிள் சைடர் வினிகரை உபயோகித்து தோலை அழகாக்கிடுங்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!