ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் ஜூலியின் அதிர்ச்சியான செயல்… வறுத்தெடுத்த பொது மக்கள்…!


பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. இவர் தற்போது கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக கலா மாஸ்டரும், கோகுலும் உள்ளனர்.

கலா மாஸ்டர்தான் ஜூலிக்கு கலைஞர் டிவியில் தொகுப்பாளர் வாய்ப்பை வழங்கி உள்ளார். ஜூலி தொகுப்பாளர் ஆனதுமே நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ராதை மனது பாட்டுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடி அசத்தினார். இதனை பார்த்த ஜூலியும் ஆர்வத்தில் அவருடன் போட்டி போட்டு நடனமாடினார்.

இதனை பார்த்து பார்வையாளர்கள் சிரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நிலைமையை உணர்ந்த ஜூலி உடனே ஒதுங்கி விட்டார். இதனை டிவியும் ஒளிபரப்ப மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி உள்ளனர்.

மேலும் ஜூலி தொகுத்து வழங்கும்போது கத்தி கத்தி சத்தமாக பேசுகிறார். இது பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைக்கிறது. எனவே அவர் சற்று சத்தத்தை குறைத்து கொண்டால் நல்லது என பொதுமக்கள் அறிவுரை கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!