எக்ஸ்சாமில் பார்த்து எழுதியதாக கூறிய பேராசிரியர்… விரக்தியில் மாணவி தற்கொலை…!


சென்னை செம்மஞ்சேரியில் உள்ளது சத்தியபாமா பல்கலைக்கழகம். இங்கு கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வந்தார், ஆந்திராவை சேர்ந்த மாணவி ராகமோனிகா.

இவர் நேற்று காலை நடந்த செமஸ்டர் எக்ஸ்சாமில் சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து எழுதியதாகவும், இதனைக் கவனித்த பேராசிரியர் ஒருவர் ராகமோனிகாவை எக்ஸ்சாம் ஹாலை விட்டு வெளியேற்றியதாகவும், ஆடைகளைக் களையச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த மாணவி ராகமோனிகா பல்கலைக்கழகத்தில் உள்ள ஹாஸ்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மாணவர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.


போராட்டம் வன்முறையாக மாறியது தான் உற்று நோக்கதக்கது நேற்று இரவு பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்கு வெளியே தீ வைக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை குவிக்கப்பட்ட பின் தான் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில், சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஜனவரி 1ம் தேதிவரை விடுமுறை வழங்கபட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 6ம் தேதிவரை செமஸ்டர் எக்ஸ்சாம் நிறைவு பெற்று பிறகு விடுமுறை அளிக்கப்படும்.

இப்போது வன்முறை காரணமாக முன்கூட்டியே விடுமுறை வழங்கபட்டுள்ளது. கல்லூரிக்கு வந்த மாணவர்கள் இன்று பாதியிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் செமஸ்டர் எக்ஸ்சாம் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அதிகார பூர்வமாக கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!