அமெரிக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை – கடும் சூறாவளி தாக்கும் அபாயம்..!!


உலகின் பல்வேறு பகுதியில் சமீப காலங்களில் அதிக அளவில் நில நடுக்கங்களும், சூறாவளி, கனமழை என தாக்கிய வண்ணம் உள்ளன. அதன் படி, தென்கிழக்கு அமெரிக்காவை நாளை ஒரு சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாக தேசிய புயல் ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையில், நாளை ஃப்ளோரென்ஸ் பகுதியை இந்த புயல் கடுமையாக தாக்க உள்ளதாகவும், அதையடுத்து, பெர்முடா பகுதி வழியே நகர்ந்து வியாழனன்று வடகிழக்கு அமெரிக்க கடற்பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, ஃப்ளோரென்ஸ் மற்றும் புயலால் பாதிக்கும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய மீட்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!