நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதே இதற்காகத்தான்… இப்படிக் கூறியது யார் தெரியுமா?


நடிகை பிந்து மாதவி தமிழில் அறிமுகமானபோது இவரது அழகான கண்களுக்காகவே நடிக்க வைக்கலாம் என பல ஹிரோக்கள் கூறினார். இதனால் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி விடலாம் என நினைத்திருந்தார் பிந்து மாதவி.

ஆனால் இவர் நடித்த அடுத்தடுத்து படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் கோலிவுட் அவரை ஓரம் கட்டியதால் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பக்கா படம் மூலம் ரீ எண்ட்ரி கொத்துள்ளார் பிந்து மாதவி.


ஆனால் இந்த படத்தில் இரண்டாவது ஹிரோயினாகதான் நடிக்கிறார். கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நிலைக்கு பிந்து மாதவி வந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு வெளியே வந்த பின் வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

ஆரவ்,ஹரிஷ் ரைசா மற்றும் ஜூலி போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதே நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்கிற எண்ணத்தில் தான். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் வாய்ப்புகள் கிடைக்காத சோகத்தை யாரிடம் சொல்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!