3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!! எதற்காக தெரியுமா..?


திருமுல்லைவாயலில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ராகவேந்திரா சுவாமியின் 347-வது ஆண்டு உத்தர ஆராதனை விழா நடை பெற்றது. இந்த விழாவுக்கு முரளி கிருஷ்ணா தலைமை தாங்கினார்.

காலை 5 மணிக்கு நரசிம்ம ஹோமம் நடந்தது. 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. 10 மணிக்கு ஹோமமாலினி ராஜ் குழுவினர் பரதநாட்டியம் நடந்தது.


மதியம் 12 மணிக்கு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு முக்தி முரளி குழுவினரின் இன்னிசையும் மாலை 7 மணிக்கு சிறப்பு மங்களாரத்தி பூஜையும் நடந்தது.

ராகவா லாரன்ஸ், அவரது தாயார் கண்மணி அம்மாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.source-maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.