ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட மஹத்துக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகை..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வெளியேற்றப்பட்ட மஹத்துக்கு ஆதரவாக பிரபல நடிகை டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக போய்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளராக கருதப்பட்ட மஹத் நேற்று வெளியேற்றப்பட்டார்.

வெளியேறும்போது மஹத்தின் கொடுத்த எமோசனலான பேச்சிற்கு அரங்கில் இருந்த மக்களிடமிருந்து பலத்த கரகோஷம் கிடைத்தது.

இது குறித்து யார் வருந்தினாரோ இல்லையோ ஜஸ்வர்யா மற்றும் யாஷிகா தேம்பி தேம்பி அழுதனர்.


முன்னரே ஜஸ்வர்யா, யாஷிகாவால் தான் மஹத் இப்படி சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என சிலர் குற்றம்சாட்டினர். இதையடுத்து நெட்டிசன்கள் ஜஸ்வர்யா மற்றும் யாஷிகாவை கலாய்த்தனர்.

ஆனால் மக்கள் அவர் மீது வெறுப்பில் உள்ளது நிஜம். இந்த நிலையில் முதல் பிக்பாஸ் சீசனின் போட்டியாளர் காயத்ரி ரகுராம், மஹத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவரை நல்லவராகவும் ஒருவரை கெட்டவராகவும் காட்டும் படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டுதான். எங்களை பற்றி பேசுவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!