படுக்கை அறையில் ‘பிளேபாய்’ மாடல் அழகி கழுத்து நெரித்து கொலை…!


அமெரிக்காவில் ‘பிளேபாய்’ மாடல் அழகி மர்மமான முறையில் ஆண் நண்பரது வீட்டில் இறந்துகிடந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா கார்லின் கிராப்ட் (36). இவர் ‘பிளே பாய்’ இதழின் முன்னாள் மாடல் அழகி ஆவார்.

சம்பவத்தன்று இவர் வீட்டின் படுக்கை அறையில் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ‘டேட்டிங்’கில் வாழ்ந்து வந்தார். கிறிஸ்டினா கார்லின் கொலை செய்யப்பட்ட அன்று ஆண் நண்பர் வீட்டில் இருந்தார். எனவே அவர் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஏற்கனவே தனது வீட்டில் நடந்த கொள்ளை குறித்து கிறிஸ்டினா போலீசில் புகார் செய்திருந்தார். நகை, கைப்பை உள்ளிட்ட திருடு போன பொருட்களை கண்டுபிடித்த போலீசார் அவற்றை கொடுக்க சென்ற போது தான் அவரை பிணமாக மீட்டனர்.

மாடல் அழகி கிறிஸ்டினா கார்லின் கிராப்ட் நியூ யார்க்கை சேர்ந்தவர். பிளே பாய் தவிர வேனிட்டி பேர், மேக்சிம், விக்டோரியா சிக்ரட் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் மாடல் அழகியாக இருந்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!