கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை..!! விசாரணையில் அதிர வைத்த காரணம்..!!


புதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் விவசாயி. இவரது மகள் காயத்ரி (வயது 18).

இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முத லாம் ஆண்டு படித்து வந்தார். காயத்ரி ஒரே மகள் என்பதால் அவரை வீட்டு வேலை செய்யாமல் தாய் பாசமாக வளர்த்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து காயத்ரி வீடு திரும்பினார். அப்போது முருகன் தாய்க்கு உதவியாக வீட்டு வேலை செய்ய வேண்டியதுதானே? என காயத்ரியை கண்டித்தார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டார். அவரது மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தீ உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்த காயத்ரியை அவரது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை காயத்ரி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!