கால்வாயில் குளிக்கச் சென்ற சகோதரிகளுக்கு நடந்த விபரீதம் – பதற்றத்தில் மக்கள்..!

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மலைராஜன். இவரது மனைவி சித்ரா தேவி. இவர்களது மகள்கள் ராஜலட்சுமி (வயது 7), ராகவி (4).

பள்ளி மாணவிகளான இருவரும் நேற்று வீட்டின் அருகில் உள்ள பெரியார் கால்வாயின் குளித்துக் கொண்டிருந்தனர். கால்வாயின் நடுப்பகுதியில் இறங்கி குளித்ததாக தெரிகிறது.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ராகவி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தாள்.

அவளது உடலை 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மற்றொரு சிறுமியான ராஜலட்சுமியை தேடும்பணி தொடர்ந்தது. பலன் இல்லை.

எனவே கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி பெரியாறு கால்வாய் மதகில் ராஜலட்சுமியின் உடல் சிக்கி இருந்தது. இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் சிறுமியின் உடலை மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றினர். -Source:Maalaimalar


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.