டெல்லியில் மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்

மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் நேற்றிரவு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95.

1924 ஆம் ஆண்டு பஞ்சாப் அருகேயுள்ள சியால்கோட் பகுதியில் பிறந்த குல்தீப் நய்யார், பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை பெற்று விளங்கியவர்.

ஐ.நா.வில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ள குல்தீப் நய்யார், நேருவுக்கு பிறகு, தீர்ப்பு முதலிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில் குல்தீப் நய்யாரின் இறுதிச்சடங்கு லோதி சாலை சுடுகாட்டில் நடைபெறும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. -Source:dailythanthi


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.