அடக்கடவுளே! வாய்க்குள் தலை விட்டு செல்பி எடுத்த மாணவருக்கு நிகழ்ந்த விபரீதம்..!


தென் ஆப்பிரிக்கா: நமீபியா கூழக்கடா பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்பி எடுத்ததால் மாணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூவான் வான்டென் ஹீவர் என்ற மாணவர் ஆராய்ச்சிக்காக நமீபியா சென்றிருந்தார். படகில் சென்றபோது கூழக்குடா எனும் பறவையும் அதில் பயணம் செய்துள்ளது.

அப்போது விளையாட்டாக அதில் ஒரு பறவையை சீண்டினார் ஜூவான். அதற்கு அதுவும் பதிலுக்கு அவருடன் விளையாடியது.

அப்போது அந்த பறவை வாயை திறந்தவுடன் ஜூவான் அதன் வாய்க்குள் தலையை நுழைக்க முயன்றுவாறு போஸ் கொடுத்து செல்பி எடுத்து கொண்டார்.

அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். அதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பறவையை கொடுமை செய்துள்ளார் என்று விலங்குநல ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து மாணவர் ஜூவான் மீது நமீபியா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!