வாலிபர் மர்மமான முறையில் அடித்துக் கொலை

ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் எதிரே சங்கரன்கோவில் சாலையில் உள்ளது பச்சமடம் திருவனந்தபுரம் தெரு. இங்குள்ள மண் சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்த வாலிபரின் உடலில் நகக்கீறல்கள் காணப்பட்டன. மேலும் கழுத்தை நெரித்ததற்கான அடையாளமும் இருந்தது. எனவே அந்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

18 வயது மதிக்கத்தக்க அவரை இழுத்து வந்து கொலை செய்து அந்த பகுதியில் யாரோ போட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? கெலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.-Source:Maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.