பஞ்சாபில் வசித்து வந்தவர் மணீஷா. இவரது தந்தை பிரான்சில் குடியேறி அங்கேயே வசித்து வருகிறார். சில காலங்களுக்கு முன் மணீஷா தாயாரை இழந்து விட்டார். இதனால் அவர் பஞ்சாபில் வேலை தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது காதலர் துரோகம் செய்து விட்டார் என கூறி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவர் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு கொண்டுள்ளார். இதனை இன்ஸ்டாகிராமில் நேரலையாக வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், மணீஷாவின் அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. அதில் தனது காதலர் இந்தர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை. இதனால் போலீசார் அவரது மொபைல் போனை கைப்பற்றி அழைப்பு விவரங்களை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
காதலருக்கு எதிராக 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source:dailythanthi
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.