2100 ஆம் ஆண்டுக்குள் இந்த ஆசிய நாடு கடலுக்குள் மூழ்கிவிடுமாம்.. பேராபத்தில் மக்கள்..!!


புவி வெப்பமயமாதல் பிரச்சனை குறித்து விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்து வருகின்றனர். ஆனால் உலக நாடுகள் இதற்கான உரிய தீர்வுகளை மேற்கொள்வதில் போதிய அக்கறை காட்டவில்லை.

இந்த நிலையில், கடல் நீர் மட்டம் திடீரென உயர்வதால், தமிழகத்தின் 3,209 சதுர கி.மீ. பகுதிகள் வரும் 2100 ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தமிழகத்துக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

சுற்றுச் சூழல் ஆய்வுகளின் அடிப்படையில், தமிழக அரசின் மாநில திட்ட ஆணையம் தயாரித்துள்ள ஒரு அறிக்கையில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.

அந்த அறிக்கையின்படி வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் சென்னை மாநகரில் மட்டும் 144 சதுர கி.மீ கடற்கரையோர பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். மேலும் 10 லட்சம் மக்கள் வசிக்கும் கடற்கரையோர பகுதிகள் நீரில் மூழ்கி விடும்.


அதோடு எண்ணூர் பகுதி குடியிருப்புகள், ஆலைகள் அனைத்தும் கடலில் மூழ்கிவிடும். பட்டினப்பாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளை தாண்டி, பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளும் கடலில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள் வரை கடல் நீர் உள்ளே வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்பாக்கம் அணு உலை, கடலூர் பெட்ரோலிய ஆலைகள், நாகப்பட்டினம் பெட்ரோலிய ஆலைகள், தூத்துக்குடி உப்பள ஆலைகள், கூடங்குளம் அணு உலை அனைத்தும் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட உள்ளதாகவும், இப்பொழுதே மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்தித்து திட்டமிட வேண்டும் என்றும், சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசு இப்பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாநில திட்ட ஆணையம் தயாரித்துள்ள எச்சரிக்கை அறிக்கையை ஒளித்துவைத்துவிட்டு செயல்படாமல் இருந்தால், கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் நிலைமைதான் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!