வாஜ்பாய் கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னாள் பிரதமரும், முதுபெரும் தலைவருமான 95 வயதுடைய அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கேட்டு வந்தது. அவரது உடல் நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக ஓரளவு உடல்நிலை சீராக இயங்கியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு சென்ற பிரதமர் மருத்துவர்களிடம் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். – Source: tamileenaduindia