குழந்தை பிறந்த பின்னர் நம்ம ஜெனிலியா இப்படி மாறிட்டாங்களே..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் ஷங்கர்.

நடிகை ஜெனிலியா, பாய்ஸ் படத்திற்கு பின்னர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.

பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள்.


திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்த நடிகை ஜெனிலியா, அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

தற்போது பொறுப்பான குடும்ப தலைவியாக தனது கணவர் மற்றும் பிள்ளைகளை கவனித்து வரும் ஜெனிலியா சமீபகாலமாக கேமராவின் கண்களுக்கு சிக்காமல் இருந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜெனிலியாவை பொது இடத்தில் கண்ட போது புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் நடிகை ஜெனிலையவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டாக மாறிவிட்டாரே என்று வியந்துள்ளனர்.source-manithan

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!