மஹத்தை காதலிப்பது உண்மைதானா..? கமலின் கேள்விக்கு யாஷிகா சொன்ன அதிரடி பதில்..!!


பிக்பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா மற்றும் மஹத் மிக நெருக்கமாக இருந்து வந்தனர். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் நடுவில் இடைவெளி அதிகரித்துள்ளது. சமீபத்தில் யாஷிகாவுடன் நட்பு மட்டும் தான் அதற்கு மீறி எதுவும் இல்லை என மஹத் அனைவர் முன்பும் டாஸ்க் செய்யும்போது கூறியதால் வருத்தமான யாஷிகா கதறி அழுதார்.

இந்நிலையில் கமல் இது பற்றி கேட்டபோது “நான் மஹத் மீது காதலில் விழுந்தது உண்மைதான். ஆனால் அவருக்கு வேறு வாழ்க்கை இருக்கிறது எனக்கு புரிகிறது” என வெளிப்படையாக அனைவர் முன்பும் கூறியுள்ளார்.

அதற்கு கமல், “அன்பு கிடைக்குதோ இல்லையோ.. நாம் கொடுத்துவிடவேண்டும். காதல் என்பது மிகப்பெரியது. நான் என் வாழ்க்கையில் பலமுறை செய்துள்ளேன். எதுவுமே பொய் இல்லை. அன்பு திரும்ப கிடைக்கவில்லை என்றால் நானே வைத்துக்கொண்டேன்” என கூறினார்.source-cineulagam

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!