பிரபல இயக்குனரின் முகத்தில் அறைந்த நயன்… எதெற்கெனத் தெரியுமா?


அறம் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக உள்ளார். இதனால் பல முன்னணி டைரக்டர்கள் கண் இவர் மீது விழுந்துள்ளது.


அது போல மெர்சல் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி 3வது முறையாக இணைகிறது. இந்த படத்தில் நயன்தாராவை நாயகியாக போட்டால் மிகப்பெரும் மாஸ் ஓபனிங் கிடைக்கும் என முருகதாஸ் நினைக்கிறார்.

எனவே அவரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஆனால் அவர் முருகதாசிடம் அப்புறம் சொல்கிறேன் என கூறி முகத்திற்கு அடித்தார் போல சொல்லி விட்டாராம். ஏனென்றால் இதற்கு முன்பு கஜினி படத்தில் நயன்தாராவை டம்மியாக்கி விட்டு அசினுக்கு கொடுத்தாராம் முருகதாஸ்.


மேலும் பேசியபடி சம்பளத்தையும் கொடுக்கவில்லையாம். இதனால் அப்போது முதலே நயன்தாரா முருகதாசிடம் கடும் கோபத்தில் இருந்துள்ளார். அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இப்போது நயன்தாரா பழிதீர்த்து விட்டார்.

இந்த படத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என விஜயும் விருப்பம் தெரிவித்து உள்ளாராம். இதனால் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து வருகிறாராம் முருகதாஸ்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!