கலைஞரின் கல்லறையில் எழுதப்படப் போகும் “அந்த” வாக்கியம் – முன்பே சொன்ன வித்தகர்..!


ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாக்கியம் கலைஞர் கருணாநிதியின் கல்லறையில் எழுதப்படவுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இதைத்தொடர்ந்து, கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளளது.

இந்நிலையில், கலைஞர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட உள்ள கல்லறை மற்றும் சந்தன பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாக்கியம் எழுதப்படவுள்ளது.

இந்த வாக்கியத்தை கருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் எழுத வேண்டும் என்று முன்பே அறிவித்துள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!