இரு குழந்தைகளையும் கழுத்தை இறுக்கிக் கொன்று இளம் தாய் தற்கொலை..!


குடும்ப தகராறில் தனது 2 குழந்தைகளையும் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. தெற்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருண் என்ற அருணாசலம் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (வயது 32). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியின் மகன் ஐசக் (2), மகள் ரெப்கா (4).

இவர்கள் அந்த பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தனர். அருணாசலத்துக்கும், சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இன்று காலையும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அருணாசலம் வீட்டில் வெளியே புறப்பட்டுச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஹாலில் 2 குழந்தைகளும் பிணமாக கிடந்தன.

மேலும் அதே அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் சரண்யாவும் பிணமாக தொங்கினார். இந்த தகவல் பரவியதும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.

சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்கு வந்தனர். கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் தனது 2 குழந்தைகளையும் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டு சரண்யா தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

சரண்யாவின் உறவினர்கள் கூறும்போது சரண்யா மற்றும் 2 குழந்தைகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதையடுத்து சரண்யாவின் கணவர் அருணாசலத்தை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சரண்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக அருணாசலம் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!