பசுவை திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பசுவை கடத்தி கொன்றதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் பசுவை திருடியதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார்.

அரியானா மாநிலம் பில்வால் மாவட்டம் பெக்ரோலா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பசுவை திருடி சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அந்த வாலிபரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியது. இதில் அவருக்கு 14 இடங்களில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். அந்த வாலிபரை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

ஆனால் போலீஸ் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வார் மாவட்ட போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார் கூறும்போது, “அந்த வாலிபரின் உடலில் 14 இடங்களில் காயம் இருந்தது. அவருக்கு குடல் இறக்கம் நோய் இருந்துள்ளது. அவரது சாவுக்கு இதுதான் முக்கிய காரணம்” என்றார்.

பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நடைபெறும் கொலைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. ஆனாலும், இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.-Source:Maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.