ஃபெமினா மிஸ் அழகி பற்றி நீங்கள் அறிந்திராத சுவராஸ்ய தகவல்கள்…!


17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் என்பவர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை பற்றி பல சுவராஸ்ய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர், இந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது தாய் மருத்துவர்.


டெல்லியிலுள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் சோன்பேட் எனும் நகரிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு மே மாதம் 14 ம் தேதி ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் பிறந்தார்.

அவரது தாய் தந்தை தங்களது வேலை நிமித்தமாக பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர். ஹரியானாவில் அவர் பிறந்திருந்தாலும் கூட தனது 3 வயதிலிருந்து அவர் பெங்களூரில் தான் வளர்ந்தார்.


மேலும் அவர் பாரம்பரிய நடனமான குச்சுப்புடி நடனத்தை பெங்களூரில் தான் கற்றிருக்கிறார். அவரது தந்தை தற்போது பெங்களூரில் வேலை பார்த்துகொண்டிருக்கிறார்.

அவர் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான கழகத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றினார். தற்போது ஹரியானாவிலுள்ள பி.பி.எஸ் அரசு மருத்துவ கல்லூரியில் தான் மனுஷி மருத்துவப் படிப்பு படித்துவருகிறார்.


மனுஷி படிக்கும் கல்லூரியில் ஆசிரியாராக இருக்கும் உஷா என்பவர் அவரை பற்றி கூறுகையில், மனுஷி ஒரு திறமைசாளி. குணத்திலும் அவர் மேலானவர். அனைவரிடத்திலும் மிகுந்த அன்பு காட்டுபவர்.

அவர் தன்னுடைய பள்ளி பருவத்தில் கூட நல்ல மதிப்பெண்கள் வாங்கும் முதல் மாணவியாக தான் திகழ்ந்தவர் என்றார். மேலும் இவர் இந்த ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!