கணவனின் சந்தேக புத்தியால் பற்களை இழந்த மனைவி..!


கணவன் ஒருவன் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர் பற்களை ஒட்டையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை என்பது சந்தேகம் தான். இந்த சந்தேக புத்தியால் பலர் தங்களது வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர்.

அகமாதாபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவன் கீதா பென் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். ரமேஷ் ஒரு ஆட்டோ ஓட்டுனர். அவனது மனைவி கீதா வீட்டு வேலை செய்து வந்தார்.

அவர்களது காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ரமேஷுக்கு கீதா மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து ரமேஷ் கீதாவிடம் நீ வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளான். கீதா கணவன் தன் மேல் உள்ள பாசத்தால் தான் இப்படி சொல்கிறான் என நினைத்துக் கொண்டார். ஆனாலும் அடங்காத ரமேஷ், நீ அழகாக இருக்கிறாய், தேவையில்லாமல் உன்னை பலர் சீண்டுவார்கள் ஆகவே உன் பற்களை எடுத்து விடு என கூறியுள்ளான்.


இதற்கு கீதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விடாத ரமேஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கீதாவின் பற்களை எடுத்துள்ளான். இதனையும் கீதா பொறுத்துக்கொண்டார்.

அதன்பிறகும் மனைவிமீது சந்தேகம் குறையாத ரமேஷ், நீ வீட்டில் தனியாக இருக்க வேண்டாம், என்னுடன் ஆட்டோவிலே இரு என கூறி சவாரி செய்யும் இடத்திற்கெல்லாம் கீதாவை கூட்டிச் சென்றுள்ளான் ரமேஷ்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கீதா, ஆட்டோவிலிருந்து கீழே குதித்துவிட்டார். இதுகுறித்து பெண்கள அமைப்பினர் ரமேஷை விசாரித்தனர். கீதா தனக்கு நடந்த கொடுமைகளை அவர்களிடம் தெரிவித்தார்.

ரமேஷ் மீது அதீத பாசம் கொண்ட கீதா, எனது கணவனை கைது செய்துவிடாதீர்கள், அவரை எச்சரித்து புரிய வைத்தால் போதும் என அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் ரமேஷுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.

இனியாவது அந்த சந்தேகப் பேர்வழி மிருகம் ரமேஷ் தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்வான் என நம்புவோம்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!