கிணற்றில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு… நடந்தது என்ன..?


ஆண்டிபட்டி அருகே கிணற்றில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டுள்ளதையடுத்து கொலையாளிகள் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியைடந்த பொதுமக்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து தெரியாத நிலையில், அவர் 40 வயது மதிப்புத்தக்க நபர் என்று போலீஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் இரவே இவரை யாரோ ஒரு மர்ம நபர் கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம் என்று கூறினார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நேரில் வந்து பார்வையிட்டார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!