பொது இடத்தில் மகாராஷ்டிரா மந்திரி செய்த கீழ்த்தரமான செயல்…!


ராம் ஷிண்டே என்ற நீர் மேலாண்மை துறை மந்திரி தனது காரில் சோலாபூரில் இருந்து பார்ஷி நகரை நோக்கி சென்றுள்ளார். அவர் சாலையோரத்தில் காரை நிறுத்தி சிறுநீர் கழித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசின் ஜல்யுக்தா ஷிவார் திட்டத்திற்காக கடந்த ஒரு மாதம் மாநிலம் முழுவதும் சுற்று பயணம் செய்தேன்.

தொடர்ந்து அதிக வெப்பநிலையில் பயணம் மேற்கொண்டதில் எனக்கு உடல்நிலை பாதிப்படைந்தது. எனக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. பயணத்தின்பொழுது கழிவறை இல்லாத நிலையில், பொதுவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!