தாயும், 10 மாத குழந்தையும் உடல் கருகி பரிதாபமாக பலி… செஞ்சி அருகே பயங்கரம்..!


செஞ்சி அருகே வீடு தீப்பற்றி ஏரிந்ததில் தாயும் மகனும் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ்(25). இவருக்கு ரேகா(21) என்ற மனைவியும், 10 மாதத்தில் நவீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இதனிடையே இன்று அதிகாலை வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அருகில் வசிப்பவர்கள் செஞ்சி அதிர்ச்சியடைந்தனர் . பின்னர் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் தீயனைப்பு துறையினர் விரைந்து வந்து பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே தாயும், 10 மாத குழந்தையும் உடல் கருகி உயிரிழந்து காணப்பட்டனர். வீட்டில் எரிந்து கொண்டு இருந்த தீயை போராடி அணைத்தனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வராஜ் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பம்மல் பகுதியில் வசித்து வந்த மாற்று சமுகத்தை சேர்ந்த ரேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செல்வராஜ் புகார் அளித்ததையடுத்து இந்த தீவிபத்து இயற்கையானதா இல்லை யாரேனும் தாயும் மகனையும் எரித்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் திண்டிவனம் கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!