திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. போஸ் காலமானார்..!!

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ். இவருக்கு வயது 69, இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.

திடீரென்று நள்ளிரவு இரவு உறங்கி கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.கே.போஸ் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே உடல் நிலை பாதிப்பால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.source-maalaimalar


*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!