காதல் திருமணம் செய்த இளம் ஜோடியை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை..!


மத்திய பிரதேசத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்ட இளம் ஜோடி மீது தாக்குதல் நடத்தியும் ஆத்திரம் தீராததால் வலுக்கட்டயமாக சீறுநீரகத்தை குடிக்க வைத்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தாஸ்பூர் மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற ஹிதேஸ் (21). இவரும், அதே ஊரை சேர்ந்த நங்கிபாய் (19) என்ற பெண்ணும் காதலித்தனர்.

அவர்களின் காதலுக்கு நங்கிபாயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இளம் பெண் நங்கிபாயின் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

அதை அறிந்த நங்கிபாயின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அதிகாலை நேரத்தில் அங்கு வந்து அவர்களை தங்கள் வீட்டுக்கு இழுத்து சென்றனர்.

ரமேசை தங்கள் வீட்டின் முன்பு கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். நங்கிபாயை அவரது தந்தை, கெரம்சிங் மற்றும் சித்தப்பாக்களும் தாக்கினர். அவரது தலையை சுவற்றில் அடித்து மோத வைத்தனர். உடையை கிழித்து அவமானப்படுத்தினர்.

அத்துடன் இவர்களது ஆத்திரம் தீரவில்லை. சிறுநீரை கொடுத்து ரமேஷ் மற்றும் நங்கிபாயை மிரட்டி கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்புயா போலீசார் விரைந்து வந்து இளம் ஜோடியை மீட்னர். சித்ரவதை செய்ததாக நங்கிபாயின் தந்தை கெரம்சிங் மற்றும் சித்தப்பாக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். நங்கிபாயின் தந்தை கெரம்சிங் கிராம பா.ஜனதா கட்சியின் தலைவராக இருக்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!