கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்து கொன்ற காமக் கொடூரன்கள்…!


ஆட்டை 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள மேவட் பகுதியில் அஸ்லு என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவரது ஆடு சினையாக இருந்துள்ளது. இந்நிலையில் தனது ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அஸ்லு, காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஆடு இறந்ததற்கான காரணம் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும் என்றனர்.

இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய், நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.” இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள பீட்டா அமைப்பின் நிர்வாகி மீட் அஷர் , விலங்குகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். விலங்குகள் மீது இது போன்ற செயலை செய்பவர்கள் பின்னர் மனிதர்கள் மீதும் நடத்துவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.-
Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!