திருமணத்திற்கு பின் நடிகை ஷாலினி என்ன செய்கிறார் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ண கூடிய அளவிற்கு தான் நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி திருமணம் செய்தும் ஒன்றாக வாழ்பவர்கள் என்றால் அதுவும் குறைவு தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் அற்புதமான ஜோடி என்றால் அதில் அஜித் மற்றும் ஷாலினியும் இடம் பெறுவார்கள். ஷாலினி குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே 26 படங்களில் நடித்திருக்கிறார். மேலும்,1984 ல் ஓசை படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். பல படங்கள் நடித்த இவர் அனைத்து முன்னணி ஹீரோவுடனும் நடித்துவிட்டார்.

சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி இதில் தான் கவனம் செலுத்தியுள்ளார்.!


அமர்க்களம் படத்தில் மூலமாக தான் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் மலர்ந்த காதல் இருவீட்டின் சம்மதத்துடன் திருமணத்தில் இணைந்தது. தற்போது இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் இருக்குழந்தைகள் உண்டு. சினிமாவிற்கு வாராத ஷாலினி பேட்மிட்டன் விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, அஜித் ஷாலினிக்கு சென்னை திருவான்மியூர் வீட்டில் ஒரு பேட்மிட்டன் ஆடுகளம் காட்டிக்கொடுத்துள்ளார், அந்த வீட்டிற்கு குடியேறியுள்ளாகள். இன்று ஷாலினியின் பிறந்த நாள் என்பதால் என்ன பரிசு கொடுக்கப்போகிறாரோ அஜித்.!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!