கல்யாணம் செய்து கொண்டு கட்டிப்பிடியுங்கள் – சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.பி..!


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி ஒருவர் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொடுவரப்பட்ட நிலையில், அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்.

பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து அதிர்ச்சி அளித்தார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தில்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல், மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிபிடித்த நிகழ்வை சுட்டிகாட்டி பேசியவர்,

நான் கட்டிபிடிப்பேன் என நினைத்து என்னை பார்த்ததும் பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி செல்கின்றனர் என்றார்.

பாஜகவையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் எதிர்க்கும். ஆனால் வெறுக்காது. அனைத்து மதங்களும் வெறுப்புடன் இருக்கக்கூடாது என்று நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது என கூறினார்.

இந்நிலையில், பாஜக எம்.பி.,க்களை கட்டி பிடித்து விடுவேன் என பயப்படுகிறார்கள் என்று அவர் கூறிய கருத்துக்கு, பாஜக கட்சி எம்.பி.,க்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபே என்பவர், ராகுல் முதலில் திருமணம் செய்து கொண்ட பிறகு எங்களை கட்டிப்பிடிக்கலாம். அவரால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை, அவரது மனைவிகள் விவாகரத்து செய்து விடுவார்கள்.

ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டப்பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை எனவும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!