வீட்டிற்கு திரும்பினார் மு.க.ஸ்டாலின்… காவேரி மருத்துவமனையில் கதறியழுத தொண்டர்கள்..!


திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு புறப்பட்டார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானதை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அங்கு குவிந்திருந்த திமுக நிர்வாகிகளும் வீட்டிற்கு திரும்பினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!