ஆஸ்பிறின் என்றாலே வலிகளையும், வீக்கங்களையும் குணப்ப்டுத்துவதுடன், இதய நோய்களின் போதும் பயன்படுத்தும் மட்டும் மருந்து என்ற எண்ணம் உங்களுக்கும் உள்ளதா? இதை தாண்டி ஆஸ்பிறினை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆஸ்பிறின் மருந்தின் சிறப்பம்சங்கள்.
1. பூச்சி கடி, குழவி கொட்டுதல் சிகிச்சைக்கு உதவும்.
பூச்சி கடி, குழவி கொட்டினால் ஏற்படும் வீக்கம், வலிகளை நீக்குவதற்கு ஆஸ்பிறினை பவுடராக்கி, நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்க வேண்டும்.
2. பருக்களை உலர வைக்கும்.
ஆஸ்பிறினை பவுடராக்கி நீர்ல் கலந்து பருக்கள் மீது பூசி, சில நிமிடங்களில் சோப்பை பயனப்டுத்தி கழுவுவதனால் உங்களுக்கு தொல்லையாக இருந்த பருக்கள் காய்ந்து முற்றாக நீங்கி விடும்.
3. சருமத்தை புத்துணர்ச்சி பெற வைக்கும்.
சருமம் சிவந்து, வீங்கி போதல், பருக்கள் ஏற்படுதல், இறந்த கலங்கள், அதிகமான எண்ணெய்த் தன்மை போன்ற சருமத் தொல்லைகளைத் தீர்ப்பதற்கு ஜந்து ஆஸ்பிறின் வில்லைகளை பவுடராக்கி, ¼ கப் நீர், ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசவும். 10 நிமிடங்களின் பின்பு சுத்தமான நீரினால் கழுவும் போது சருமம் புத்துணர்ச்சி பெறும்.
4. தோல் தடிப்பமடைவதை குணப்படுத்தும்.
தடிப்பமான தோல் பகுதிகள் உள்ள இடத்தில் 5 ஆஸ்பிறின் வில்லைகளை பவுடராக்கி எலுமிச்சப் பழச் சாறு, தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சூடான நீரினால் தோய்த்த துணியினால் சுற்றிக் கட்ட வேண்டும். 10 நிமிடங்களில் சிறந்த தீர்வைப் பெற முடியும்.
5. பொடுகை அகற்றும்.
2 ஆஸ்பிறினை சம்போவில் கலந்து குளிப்பதனால் பொடுகுத் தொல்லை முற்றாக நீங்கும்.
6. கறைகளை நீக்கும்.
ஆஸ்பிறின் கலந்த நீரில் கறை படிந்த துணியினை ஊற வைத்து தோய்ப்பதனல் கறைகளை முற்றாக நீக்க முடியும்.
7. முடியின் நிறத்தை மீளளிக்கும்.
முடியின் கருமை நிறம் குறைவடியும் போது 6-8 வில்லைகளை நீரில் கலந்து அதனை முடியில் தேய்த்துக் குளிப்பதனால் முடியின் நிறத்தை மீளப் பெற முடியும்.
8. சமையல் பாத்திரத்தில் எண்ணெய்களை அகற்றும்.
பாத்திரங்களைக் கழுவும் போது ஆஸ்பிறின் பசையை பயன்படுத்துவதனால் பாத்திரம் பளபளக்கும்.
9. தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
ஆஸ்பிறின் கலந்த நீரை தாவரத்திற்கு பயன்படுத்துவதனால் தாவரம் வளர்வதற்கு உதவும்.- © Tamilvoice.com | All Rights Reserved
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!