இப்படி செய்து பாருங்களேன்! ஒரே வாரத்தில் காணாமல் போகும் கருவளையம்..!


கண்களைச் சுற்றி கருவளையம் வந்து விட்டாலேயே முகத்தின் அழகு குறைந்து போவதோடு நோய்வாய்ப்பட்டதைப் போன்ற ஒருதோற்றமும் கூடவே வந்து விடும்.
இந்தக் கருவளையங்களை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இல்லாதொழிக்க முடியும் என்பது நாம் அறிந்ததே. எனினும், குறிப்பாக சில பொருட்களைப் பயன்படுத்தினால் கருவளையத் எளிதாக ஒழிக்க முடியும்.

அவை என்ன என்கின்றீர்களா?
01. பாதாம் எண்ணெய்
கண்களைச் சுற்றி பாதாம் எண்ணெயை பூசி சிறிது நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் கண்ணைச் சுற்றி பாதாம் எண்ணெயை பூசி விட்டு மறுநாள் காலை குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கருவளையம் குறையும்.

02. தக்காளி
எலுமிச்சைசாறு மற்றும் 2 தேக்கரண்டி தக்காளிசாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை முகத்தில் பூசி வந்தால், கருவளையம் குறையத் தொடங்கும்.


03. வெள்ளரிக்காய்
கருவளையத்துக்கு மிகச்சிறந்த தீர்வாக அமைவது வெள்ளரிக்காய் என்பது நமக்குத் தெரியும். வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக்கி அரைமணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து பத்து நிமிடங்கள் வரை கண்ணின் மேல் வைத்திருக்க வேண்டும். பின் சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். கண்ணுக்கு கீழே உள்ள கருவளையம் மறைவதோடு, முகமும் பொலிவுடன் இருக்கும்.

04. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை மசித்து அதன் சாறை எடுத்து கண்களின் மேல் பூசி 15 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். அத்தோடு இரவில் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி கண்ணுக்கு மேல் வைத்திருந்து எடுத்தாலும் கருவளையம் மறையும்.

05. குளிர்ந்த பால்
அதே போல குளிர்ந்த பாலை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு மேல் 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். இதை தினமும் செய்து வருவதன் மூலம், கருவளையம் உடனடியாக மறையும். © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!