ஆந்திராவில் செம்மரம் வெட்டிய 4 தமிழர்கள் அதிரடியாக கைது…!


ஆந்திராவில் திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மர கட்டைகளை வெட்டி சிலர் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என ஆந்திர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவல் துறையினர் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் செம்மர கட்டைகளை வெட்டி கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் காவல் துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து செம்மர கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை, மாணிக்கம், சிவகுமார் மற்றும் சேகர்பாபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!