டிவியின் நேரலையில் பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்த மவுலானா…!


டிவியின் நேரடி ஒளிபரப்பின் போது பெண் வக்கீல் ஒருவரை மவுலானா இஜாஸ் அர்ஷாத் கஸ்மி தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஜீ இந்துஸ்தான் டிவியில் நேரடி நிகழ்ச்சியாக நேற்று விவாதம் ஒன்று நடைபெற்று கொண்டு இருந்தது. நிழச்சியின் மவுலானா இஜாஸ் அர்ஷத் கஸ்மி என்பவர் பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்தார். இது குறித்து டிவி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் மவுலானாவை கைது செய்தனர்.

மவுலானா அடிக்கடி டிவி விவாதங்களில், பங்கேற்பவர் . முத்தலாக் விவகாரத்திற்காக எதிராக போராடும் வக்கீல் பராஹ் பைஸை, செவ்வாய்க்கிழமை மாலை ஒரு விவாதத்தின்போது தொலைக்காட்சி நேரலையில் தாக்கினார். முத்தலாக் குர்ஆனில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்து அல்ல என வக்கீல் பராஹ் பைஸ் வாதிட்டார். இது மவுலானாவுக்கு வக்கிலுக்கும் இடையே சண்டையை தூண்டியது. இதனால் ஆவேசம் அடைந்த மவுலானா பெண் வக்கீலை கன்னத்தில் அறைந்தார்.

ஆனால் வீடியோ காட்சியில் பெண் வக்கீலே முதலில் மவுலானாவை தாக்குகிறார்.

தற்போது இந்த வீடியோ காட்சி டுவிட்டரில் வைரலாகி உள்ளது மவுலானாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!