நாயை கூட விட்டு வைக்காத கொடூரம் – கொல்கத்தாவில் நடந்த அதிர்ச்சி..!


கொல்கத்தாவில் நாயுடன் உடலுறவு கொண்ட 35 வயது நபரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா, பட்டிபுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் மட்டோ.35 வயதான இவர் காகிதம் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இவர் அடிக்கடி தெருநாய்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு 9 மணியளவில், கமலேஷ் ஒரு தெருநாயை தான் வேலை செய்யும் ஆலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனை அந்த வழியில் சென்ற மூன்று வாலிபர்கள் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காக அவரை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது அவர் நாயுடன் உடலுறவு கொள்வது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் அந்த மூன்று பேரும் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்துஐபிசி குற்றப்பிரிவு 377 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!