பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகளை போக்க வேண்டுமா..? இதை சாப்பிட்டாலே போதும்.!


குழந்தை பிறந்ததற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகள் தான்.

இவை சிவப்பு, பிங்க் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். இதற்காக சில க்ரீம்கள், மற்றும் மருந்துகளை பயன்படுத்துவார்கள்.

அதில் பலன் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக தழும்புகளை குறைக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

“ஒமேகா 3 S” அடங்கி உள்ள உணவு பொருட்கள் அனைத்தும் தழும்புகளை குறைக்க உதவுகிறது. இது, சருமத்திற்கு பொலிவையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

மீன், மீன் எண்ணெய், வால்நட்ஸ், முட்டை ஆகியவற்றில் ஒமேகா 3 S அடங்கியுள்ளது.

“வைட்டமின் ஏ” நிறைந்த உணவுகள் சருமத்தில் உள்ள மாசு மருக்களை நீக்கி பளிச்சென மின்னும் சருமத்தை கொடுக்கின்றது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.


“விட்டமின் சி” சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சரும செல்களை பாதுகாப்பதிலும், புதிய சரும செல்களை வளர வைப்பதிலும் உதவுகிறது

பிரவசவ காலத்தில் விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சருமத்தின் சுருக்கங்களை குறைக்க உதவும். சருமம் விரிவடையும் அளவை குறைக்கும்.

விட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள், பருக்கள் ஆகியவற்றை போக்குகிறது.

அவோகேடா, கோதுமை, சமைக்கப்பட்ட தக்காளி, ஒட்ஸ் ஆகியவற்றில் விட்டமின் ஈ உள்ளது. இது பிரசவத்தின் போது ஏற்பட்ட தழும்புகளை போக்க உதவுகிறது.

உடலில் ஜிங்க் குறைபாடு இருப்பது தழும்புகள் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இது முட்டைகள், மீன், நட்ஸ், சிக்கன், முழு தானிய உணவுகளில் இருந்து ஏராளமாக கிடைக்கிறது.


ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

இது தோல் சுருக்கம், முதுமை தோற்றம் ஆகியவற்றை குறைக்கும் வல்லமை கொண்டது.

இது ஸ்ட்ராபேரி, ப்ளூபேரி மற்றும் மற்ற பழங்களில் அதிகமாக காணப்படுகிறது.

தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உங்களது உடல் குளிர்ச்சியடைகிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!