நூலிழையில் உயிர் தப்பிய திருமண தம்பதி… எங்கு தெரியுமா..?


ஐரோப்பா நாட்டு திருமண தம்பதியர் நூலிழையில் உயிர் தப்பிய தரனத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

இந்த திருமணத்தின் நினைவுகளை அழியாமல் பார்த்துக்கொள்ள தற்காலங்களில் புகைப்பட கலைஞர்கள் தான் உதவுகின்றனர். திருமணம் ஆகி சில தினங்களிலேயே தம்பதியர் இருவரும் பிரிந்துவிடும் நிகழ்வுகள் நடப்பதுண்டு, அந்த சமையத்தில் அவர்களது திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் பிரிந்துவிடும் தம்பதியரையும் இணைத்துவிடும் வல்லமை படைத்துள்ளது.

அத்தகைய புகைப்படத்திற்காக புகைப்பட கலைஞர்கள் எத்தனை அளவு தான் மெனக்கிடுகிறார்கள். இவ்வாறு ஐரோப்பா நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் திருமண ஜோடி ஒன்றின் திருமணத்திற்கு முந்தைய புகைப்பட படப்பிடிப்பினை நடத்தியுள்ளனர்.

அப்போது யாரும் எதிர்பாரா விதமாக திருமண ஜோடிகளின் மேல் விழ காத்திருந்த மரக்கிளைகளில் இருந்து தம்பதியர் உயிர் தப்பிய பரபரப்பு நிமிடங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த வீடியோவினை சம்பந்தப்பட்ட புகைப்பட கலைசஞர்கள் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோவிற்கான வரவேற்பு நெட்டீசன்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.-Source: zeenews.india

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!