போதையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த காமுகர்கள்.. சிரித்துக்கொண்டே வெளியேறிய அதிர்ச்சி சம்பவம்..!!


பிரித்தானியாவில் 19 வயதுப் பெண்ணை, பார்கில் வைத்து மூவருமாக சீரழித்துவிட்டு, பின்னர் சிரித்துக்கொண்டே வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கன்ரபெரியில் கடந்த ஏப்ரல் மாதம் பார்க் ஒன்றில் ஒரு பெண் நிர்வாணமாக கதறிக்கொண்டு இருந்தார். அயலவர்கள் பொலிசாருக்கு அழைப்பை விடுத்தார்கள். குறித்த 19 வயதுப் பெண் கியூபா நாட்டு உணவுகள் பரிமாறும் ஒரு உணவகத்தில் மது அருந்தியுள்ளார். சுய நினைவை இழந்து அவர் வெளியே வந்தவேலையில் மூவர் அந்த பெண்ணை அழைத்து சென்று பூங்காவில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

சலீகா(25) சலி(23) மற்றும் ஓமர்(24) ஆகியோர் குறித்த பெண்ணை, பலவந்தமாக அருகில் உள்ள பூங்கா ஒன்றுக்கு இழுத்துச் சென்று பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு பின் சிரித்தபடி பேசிக்கொண்டு ஜாலியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். இதனை அங்குள்ள சி.சி.டி.வி கமெராவில் கண்ட பொலிசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவர்களுக்கு நீதிபதி 27 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளார்.source-newstig

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!