இந்தியாவில் மகள் காதலனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டுவதாக கருதி தந்தை கோடாரியால் அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேச மாநிலத்தின் Krishna மாவட்டத்தில் அமைந்திருக்கும் Chandarlapadu என்ற பகுதியில் தன்னுடைய 22 வயது மகளான Chandrika-ஐ அவரது தந்தை Kotaiah கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்தார்.
மகளை தந்தையே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தந்தையை கைது செய்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், சந்திரிகா அதே மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் B. Pharmacy படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய பிறந்த நாளை கடந்த வெள்ளிக் கிழமை தன் சக நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த அவர் தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், அவரையே கல்யாணம் செய்ய கொள்ள விரும்புவதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மறுநாள் மாலை நேரத்தில் சந்திரிக்கா தன்னுடைய காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய அவரின் தந்தை கோட்டையா மகள் போனில் பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டுவதாக கருதி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மகளின் தலையில் தாக்கியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சந்திரிகா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்திரிகாவின் தாத்தாவையும் கைது செய்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி சந்திரிகாவின் தாயிடமும் பொலிசார் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் உள்ளூர் ஊடகம் ஒன்று சந்திரிகா காதலித்தது வேறொரு சமூகத்தை சேர்ந்த பையன் எனவும், இதன் காரணமாகவே ஆத்திரத்தில் கோட்டையா இப்படி ஒரு சம்பவத்தை செய்திருப்பதாகவும், இது ஒரு ஆணவக் கொலையாகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.source-lankasri
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!