குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த மாணவர்கள்… ஆந்திராவில் பயங்கரம்!


ஆந்திராவில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மாணவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் பிறந்த நாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த கல்லூரியில் படிக்கும் சக மாணவ-மாணவியல் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது 22 வயது ஜூனியர் மாணவி ஒருவருக்கு சீனியர் மாணவர்கள் 2 பேர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக எடுத்த அந்த மாணவர்கள் பின்னர் மாணவியை விடுதியில் கொண்டு விட்டனர். பின்னர் அந்த வீடியோ காட்சியை காட்டி மாணவியை மிரட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். கல்லூரி முதல்வர் மாணவர்களை கண்டித்ததுடன் இந்த விவகாரத்தை முடித்துக்கொண்டார். கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் மாணவியின் சார்பிலும் போலிசில் புகார் அளிக்கவில்லை.

இந்தநிலையில், சில மாதங்களுக்கு பிறகு வேறு ஒரு மாணவரின் வடிவில் அந்த மாணவிக்கு பிரச்சனை தலைதூக்கியது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பழைய வீடியோவை வைத்து அதே கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவர் அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்தார். மேலும் ரூபாய் 10 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் இதனை சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறி மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 376, 376-B மற்றும் 354 பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மாணவியை ஏற்கனவே பாலியல் வன்கொடுமை செய்த 2 மாணவர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!