‘பிக்பாஸ் வீட்டில் சண்டையா..? படப்பிடிப்பு நிறுத்தம்..?

தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 1 நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. சினிமாவில் காணாமல் போயிருந்த ஓவியா இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தார். அதே போல் ஜூலி, ரைசா, ஹரிஸ் உள்ளிட்ட பலர் சினிமா வாய்ப்பு பெற்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது ஒளிபரப்பபட்டுக் வருகின்றது. இதற்காக பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிரமாண்ட செட் போட்டு 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவாரம் கூட முழுமையாக நடைப்பெறாத நிலையில், ஃபெப்சி ஊழியர்களின் ஊதிய பிரச்னை காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைக்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டும் செய்தி வெளியாகியுள்ளன. மற்றபடி இதுகுறித்து விரிவான தகவல் வெளியிடப்படவில்லை.–Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!